Friday, January 25, 2013

மலை மீது வாழும் ஸ்ரீ ஸ்ரீநிவாசா!



மலை மீது வாழும் ஸ்ரீ ஸ்ரீநிவாசா!
எனைக் காக்கும் உன் பாதமே!
எனைக் காக்கும் உன் பாதமே! (மலை)

கண்ணன் ஆகி வந்தவா! மன்னன் ஆகி வந்தவா!
மண் காக்க அவதாரம் செய்தவா! (கண்ணன்)

மாயம் செய்த மாயவா! காயம் தந்த தூயவா!
உனைக் காக்க பல தாரம் கொண்டவா!

என்றன் ஜீவனே! வாழும் தெய்வமே!
உன்றன் பாதமே மோக்ஷமாகுமே!
உலகெங்கும் உன் லீலை சுகமானதே!
அருள் தந்து தினம் காக்கும் கிரிநந்தனா! (மலை)

கீதை சொல்லி மாதவா பாதை தந்த ஆதவா!
உனைத் தேடி உயிர் ஒன்று சூழுமே! (கீதை)

சங்கெடுத்து ஊதியே பங்களித்த மேன்மையே
உன் சேவை தர்மத்தின் சேவையே!

அன்பு நேசனே! ஆதி ஜோதியே!
இன்பம் இன்பமே ஏழு மாமலை!
மனம் எங்கும் உன் கோவில் அழகானதே!
பொருள் வந்து குவிகின்ற மலை நின்றவா! (மலை)

ஞானம் என்ற தேரினை ஓட்டும் பார்த்த சாரதி!
வினை தீர ஒளி வந்து சேருமே! (ஞானம்)

மோனம் என்ற உண்மையில் மூழ்கி நின்ற ஸ்ரீபதி!
எனைக் காக்க உன் பாதம் வேண்டுமே!

வந்த காரணம் வாழும் காரணம்
அந்த காரணம் அறியவில்லையே!
அறிவினை அறிவுறுத்தும் அமரேந்திரா!
அதைத் தேடி அலைகின்ற எனைக் காக்க வா! (மலை)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP