Monday, December 10, 2012

திருதராட்டிரன் வாயால் கண்ணன் புகழ்

 பாரதியாரின் பிறந்தநாளான (December-11th) இன்று
பாஞ்சாலி சபதத்தில் திருதராட்டிரனின் மனத்தில்
பகைமையைத் தூண்டிவிடும்எண்ணத்துடன் சகுனி,
வேள்வியில் பாண்டவர் கெளரவரை மதிக்காமல்
 கண்ணனுக்கு முதலுபசாரம் செய்ததைச் சொல்ல,
திருதராட்டிரன் 'கண்ணனே முதலுபசாரம் பெறத்
தகுதியுள்ளவன்' என்று கண்ணனைப் புகழும் பகுதி கீழே :

    [Bharathi.jpg]

திருதராட்டிரன் வாயால் கண்ணன் புகழ்


'கண்ணனை ஏதெனக் கொண்டனை?-அவன்
காலிற் சிறிதுகளொப்பவர் -நிலத்
தெண்ணரும் மன்னவர் தம்முள்ளே -பிறர்
யாருமிலை யெனல் காணுவாய் .'

"ஆதிப்பரம்பொருள் நாரணன் ;-தெளி
வாகிய பொற்கடல் மீதிலே -நல்ல
சோதிப்பணாமுடியாயிரம் -கொண்ட
தொல்லறி வென்னுமோர் பாம்பின்மேல் -ஒரு
போதத் துயில் கொளும் நாயகன் ,-கலை
போந்து புவிமிசை தோன்றினான் -இந்தச்
சீதக்குவளை விழியினான் "-என்று
செப்புவர் உண்மை தெளிந்தவர் .'

'நானெனும் ஆணவந் தள்ளலும் -இந்த
ஞாலத்தைத் தானெனக் கொள்ளலும் -பர
மோனநிலையின் நடத்தலும் -ஒரு
மூவகைக் காலங் கடத்தலும் -நடு
வான கருமங்கள் செய்தலும் -உயிர்
யாவிற்கும் நல்லருள் பெய்தலும் -பிறர்
ஊனைச் சிதைத்திடும் போதினும்-தனது
உள்ளம் அருளில் நெகுதலும் ,'

'ஆயிரங்கால முயற்சியால் -பெற
லாவர் இப்பேறுகள் ஞானியர்;-இவை
தாயின் வயிற்றில் பிறந்தன்றே -தம்மைச்
சார்ந்து விளங்கப் பெறுவரேல் ,-இந்த
மாயிரு ஞாலம் அவர்தமைத் -தெய்வ
மாண்புடையாரென்று போற்றுங்காண் !-ஒரு
பேயினை வேதம் உணர்த்தல்போல் ,-கண்ணன்
பெற்றி உனக்கெவர் பேசுவார்?'

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP