Monday, September 10, 2012

வேய்ங்குழல்


[Bharathi.jpg]
பாரதியாரின் நினைவுநாளில் [11th september]
    எனக்குப்பிடித்த பாரதி  பாடல்களில் ஒன்று
    கண்ணன் பாட்டு அன்பர்களுக்காக:

வேய்ங்குழல்

எங்கிருந்து வருகுவதோ?-ஒலி
யாவர் செய்குவதோ?-அடி தோழி!
1)
குன்றினின்றும் வருகுவதோ?-மரக்
             கொம்பினின்றும் வருகுவதோ?-வெளி
மன்றினின்று வருகுவதோ?-என்றன்
             மதிமருண்டிடச் செய்குதடி!-இஃது (எங்கிருந்து)
2)
அலையொலித்திடும் தெய்வ -யமுனை
              யாற்றினின்றும் ஒலிப்பதுவோ?-அன்றி
இலையொலிக்கும் பொழிலிடை நின்றும்
             எழுவதோ இஃதின்னமுதைப்போல்?(எங்கிருந்து)
3)
காட்டினின்றும் வருகுவதோ? -நிலாக்
             காற்றைக் கொண்டு தருகுவதோ?-வெளி
நாட்டினின்றுமித் தென்றல் கொணர்வதோ?
            நாதமிஃதென் உயிரையுருக்குதே!(எங்கிருந்து)
4)
பறவை யேதுமொன்றுள்ளதுவோ!-இங்ஙன்
              பாடுமோ அமுதக் கனற்பாட்டு?
மறைவினின்றுங் கின்னரராதியர்
             வாத்தியத்தினிசை யிதுவோ அடி!(எங்கிருந்து)
5)
கண்ணனூதிடும் வேய்ங்குழல் தானடி!
                காதிலேயமு துள்ளத்தில் நஞ்சு ,
பண்ணன்றாமடி பாவையர்வாடப்
                யெய்திடும் அம்படி தோழி!(எங்கிருந்து)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP