Sunday, April 29, 2012

செல்லமே,என் உள்ளத்தில் உறங்கிவிடு!

 'சர்வம் நீயே' வலையில் சென்ற ஆண்டு பதிவிட்ட கண்ணன் பாட்டு  

இங்கு கண்ணன் பாட்டு அன்பர்களுக்காக:




செல்லமே,என் உள்ளத்தில் உறங்கிவிடு!


புல்லை துளைத்தன்று குழல்

மெல்லிசையால் மயக்கியவா!

செல்லாக் காசான எந்தன்

உள்ளத்திலே துளையிட்டு,

மெல்ல மெல்ல உள்புகுந்து,

சொல்லெடுத்துத் தந்துவிட்டு,

சொல்லாமல் கொள்ளாமல்

செல்லத்திட்டமிட்டாயா?

அன்பென்னுங் கல்லிட்டு

அடைத்துவிட்டேன் துளையை!

பொல்லாத போக்கிரியே !

செல்ல வழி ஏதுமில்லை!

தொல்லை செய்யாமல்,ஒரு

நல்லபிள்ளைபோல,எந்தன்

செல்லப்பிள்ளை போல,எந்தன்

உள்ளத்திலே உறங்கிவிடு!

2 comments :

Rathnavel Natarajan said...

அருமை.

Lalitha Mittal said...

ரத்னவேல்ஜி,

வருகைக்கு நன்றி

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP