Saturday, January 28, 2012

என் கண்ணனைக் கண்டாயா?


மண்ணே மரமே செடியே கொடியே
கண்ணனைக் கண்டாயா - என்
கண்ணனைக் கண்டாயா?

கண்ணனைக் கண்ட காரணத்தாலே
சமைந்து நின்றாயா – நீ
சமாதி கொண்டாயா?

புல்லே பூவே புதரே என்றன்
கண்ணனைக் கண்டாயா – என்
கள்வனைக் கண்டாயா?

கள்வனைக் கண்ட காரணத்தால்
மெய்சிலிர்த்துக் கொண்டாயா – புளகம்
அரும்ப நின்றாயா?

மலையே மடுவே குன்றே குடிலே
கண்ணனைக் கண்டாயா – என்
மன்னனைக் கண்டாயா?

மன்னனைக் கண்ட காரணத்தாலே
மலைத்து நின்றாயா – நீயும்
சிலையாய் ஆனாயா?

மழையே வெயிலே பனியே என்றன்
கண்ணனைக் கண்டாயா – அவன்
கனிமுகங் கண்டாயா?

கனிமுகங் கண்ட காரணத்தாலே
பனியெனக் கரைந்தாயா – உன்
மனதினை இழந்தாயா?

மயிலே குயிலே கிளியே வளியே
கண்ணனைக் கண்டாயா – என்
கண்ணனைக் கண்டாயா?

கண்ணனைக் கண்ட காரணத்தாலே
மயக்கம் கொண்டாயா – உன்னை
மறந்து நின்றாயா?

இன்னும் ஒருமுறை கண்ணனைக் கண்டால்
கொஞ்சம் இரக்கம் கொள்ளுங்கள் - உடனே
என்னிடம் சொல்லுங்கள்

கண்ணில் நீருடன் காத்திருக்கேனென
அவனிடம் சொல்லுங்கள்!


--கவிநயா

8 comments:

  1. வானத்துநிலவே !நட்சத்திரமே!

    மாயனைக்கண்டாயா?ராதை

    நேயனைக் கண்டாயா?


    "நான் இவன் கண்ணொளிமுன்

    மின்மினியோ?"என்று நாணி

    முகிலுக்குள் மறைந்தாயா?

    ReplyDelete
  2. அருமையான கவிதை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வாங்க லலிதாம்மா. உங்க வரிகள் ரொம்ப அழகா இருக்கு :)

    ReplyDelete
  4. //அருமையான கவிதை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.//

    மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  5. //
    இன்னும் ஒருமுறை கண்ணனைக் கண்டால்
    கொஞ்சம் இரக்கம் கொள்ளுங்கள் - உடனே
    என்னிடம் சொல்லுங்கள்

    கண்ணில் நீருடன் காத்திருக்கேனென
    அவனிடம் சொல்லுங்கள்!//

    So Beautiful!! <3
    Thanku for posting this!!
    Even nature is so cruel at times.
    Everything u see reminds u of Him!! :((

    ReplyDelete
  6. Thank you ILWK. Glad you liked it.

    //Even nature is so cruel at times.
    Everything u see reminds u of Him!! :((//

    so true! :(

    ReplyDelete
  7. Kavinaya akka: chance e illa.. :)

    //இன்னும் ஒருமுறை கண்ணனைக் கண்டால்
    கொஞ்சம் இரக்கம் கொள்ளுங்கள் - உடனே
    என்னிடம் சொல்லுங்கள்

    கண்ணில் நீருடன் காத்திருக்கேனென
    அவனிடம் சொல்லுங்கள்..//

    அவங்க எல்லாரும் சொன்ன உடனே என்னிடமும் சொல்லுங்கள்.. :)

    ReplyDelete
  8. //அவங்க எல்லாரும் சொன்ன உடனே என்னிடமும் சொல்லுங்கள்.. :)//

    அது சரி :) அவசியம் சொல்றேன்!

    //Kavinaya akka: chance e illa.. :)//

    நன்றி சங்கர்.

    ReplyDelete