Thursday, August 04, 2011

எங்கெங்கும் என் கண்ணன்



கண்ணா கண்ணா என்றலைந்தேன்
கண்ணீராலே தினந் தொழுதேன்
கண்ணன் எங்கே என்றறியேன்
கண்ணால் காணும் வகையறியேன்

ஒரு நாள் கண்ணன் குழல் கேட்டேன்
குழல் வழியே அவன் குரல் கேட்டேன்
எங்கும் நானே இருக்கின்றேன்
ஏனோ கண்ணீர் எனச்சொன்னான்

காற்றாகி குழல் கலைக்கின்றான்
மழையாகி மனம் நனைக்கின்றான்
சேற்றிலும் அவனே இருக்கின்றான்
செந்தாம ரையாய் சிரிக்கின்றான்!

நேற்றாய் இன்றாய் நாளானான்
நாளும் பொழுதும் அவனானான்
கேட்கும் ஒலியில் இசையானான்
பார்க்கும் அனைத்தும் அவனானான்!

எங்கும் அவனாய் இருந்தாலும்
ஏக்கம் ஏனோ தீரவில்லை -

தொட்டுப் பிடித்து விளையாட
கட்டி யணைத்துக் கதை பேச
கணமும் என்னைப் பிரியாமல்
கண்ணுக்குள்ளே கண் பார்க்க...

எனக்கே எனக்காய் என்கண்ணன்
என்றன் முன்னே வருவானோ?
கனிவாய்க் கண்ணீர் துடைப்பானோ?
தணியா இன்பம் தருவானோ?


--கவிநயா

27 comments:

  1. //கண்ணுக்குள்ளே கண் பார்க்க...//

    வெட்கமா இருக்கு, முருகா!:)

    எனக்கே எனக்காய் என்முருகன்
    என்றன் முன்னே வருவானோ?
    கனிவாய்க் கண்ணீர் துடைப்பானோ?
    தணியா இன்பம் தருவானோ?

    ReplyDelete
  2. //தணியா இன்பம் தருவானோ?//

    தாகம்-ன்னா தணிய வேணாமா?
    அது என்ன "தணியா" இன்பம்? ஒரு வேளை "தனியா" இன்பமோ? :)

    ஆனாலும் எனக்குத் தணியா இன்பம் தான் வேணும்!
    தணியனும், ஆனா தணியக் கூடாது!
    நாளைக்கு மறுபடியும்...தணியனும், ஆனாத் தணியக் கூடாது!

    முருகா, இந்தக் கவி-க்கா நான் நினைக்கிற மாதிரியெல்லாம் எழுதறாங்க! நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பரிசு குடுப்போமா?:)

    ReplyDelete
  3. //கேட்கும் ஒலியில் இசையானான் //
    எனக்கு மிகவும் பிடித்த வரி. :-)
    ஏனெனில் இந்த ஒன்று தான் ஓரளவு அனுபவத்தில் உணர முடிகிறது.

    ReplyDelete
  4. //தொட்டுப் பிடித்து விளையாட
    கட்டி யணைத்துக் கதை பேச
    கணமும் என்னைப் பிரியாமல்
    கண்ணுக்குள்ளே கண் பார்க்க...//

    My fav lines....my dear kanna, seekiram variya pls? :))

    @kavi aunty: nethu kooda en friend kettaa...nee mattum olungo...bf-vf ellam kidaiyaadha-nnu...what to do?? psp is nt coming for dating!! how can i tell them??

    oru velai unga kavithai kaamichu "ippo vareengla illaiya"-nnu ketta varuvaara psp??

    ReplyDelete
  5. //எனக்கே எனக்கய் என்கண்ணன்
    என்றன் முன்னே வருவானோ?
    கனிவாய்க் கண்ணீர் துடைப்பானோ?
    தணியா இன்பம் தருவானோ?//

    :)))

    //எனக்கே எனக்காய் என்கண்ணன்//
    @kavi aunty: indha line-ai suttuttaa kochipeengala??? :)

    ReplyDelete
  6. @krs: //வெட்கமா இருக்கு, முருகா!:)//
    @kavi aunty:
    //தொட்டுப் பிடித்து விளையாட
    கட்டி யணைத்துக் கதை பேச//

    ungalukkaaga indha pic-ai dedicate panren (the first pic in that gallery):

    http://allaboutkrishna.blogspot.com/2011/07/picture-says-it-all.html

    ReplyDelete
  7. siva arumaiyana kavithai i like very much

    ReplyDelete
  8. romba azhagaa irukku paattu...

    /engum naanae irukkindraen
    aeno kanneer ena sonnaan/

    sari thaanae? aen kanneer?

    ReplyDelete
  9. பாட்டும் படமும் கொள்ளை அழகு....

    ReplyDelete
  10. பாட்டு பிரமாதம்!சுப்பு சாருக்காக [music] வெய்டிங்!

    ReplyDelete
  11. மீண்டும் படிக்கிறேன்...
    நாயகி பாவம் என்றும் புரிந்ததில்லை. இன்றும் புரியவில்லை. :-)

    ReplyDelete
  12. awesome poem akka.. sooper o sooper.. !! :)

    ReplyDelete
  13. வருக கண்ணா.

    உங்க முருகன் வருவான் :) ஆனா, எனக்கே எனக்காய் என் கண்ணன் வருவான் அப்படின்னு நீங்க சொல்லவே இல்லையே? :)

    //தாகம்-ன்னா தணிய வேணாமா?
    அது என்ன "தணியா" இன்பம்? ஒரு வேளை "தனியா" இன்பமோ? :)//

    சரிதான். தாகம்னா தணியத்தான் வேணும். இன்பம் தணியத் தேவையில்லையே... :)

    //முருகா, இந்தக் கவி-க்கா நான் நினைக்கிற மாதிரியெல்லாம் எழுதறாங்க! நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பரிசு குடுப்போமா?:)//

    எங்கே பரிசு? இன்னும் வரலை! :)

    ReplyDelete
  14. //எனக்கு மிகவும் பிடித்த வரி. :-)
    ஏனெனில் இந்த ஒன்று தான் ஓரளவு அனுபவத்தில் உணர முடிகிறது.//

    நல்லது ராதா. நன்றி :)

    //நாயகி பாவம் என்றும் புரிந்ததில்லை. இன்றும் புரியவில்லை. :-)//

    ஹ்ம்... இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலையே... புரியும்போது அது ஒரு தனிச் சுகம்தான் :)

    ReplyDelete
  15. //My fav lines....my dear kanna, seekiram variya pls? :))//

    mine too :)

    //oru velai unga kavithai kaamichu "ippo vareengla illaiya"-nnu ketta varuvaara psp??//

    நிச்சயம் வருவான்! :)

    ////எனக்கே எனக்காய் என்கண்ணன்//
    @kavi aunty: indha line-ai suttuttaa kochipeengala??? :)////

    எனக்குமே ரொம்ப பிடிச்ச வரி. தானா வந்து விழும் வகைகளில் ஒன்று. ஆனா சுட்டுக்கறதுக்கு உங்களுக்கு special permission உண்டு :) just 'cos u r ILWK :)

    மிக்க நன்றி கள்வனின் காதலி!

    ReplyDelete
  16. //http://allaboutkrishna.blogspot.com/2011/07/picture-says-it-all.html//

    கண்டு மகிழ்ந்தேன். பரிசுக்கு நன்றி கள்வனின் காதலி :)

    ReplyDelete
  17. //arumaiyana kavithai i like very much//

    மிக்க நன்றி அனானி!

    ReplyDelete
  18. //Nice ... Thanks:)//

    நன்றி ராஜேஷ்!

    ReplyDelete
  19. ///engum naanae irukkindraen
    aeno kanneer ena sonnaan/

    sari thaanae? aen kanneer?//

    'ஏக்கம் ஏனோ தீரவில்லை' க்கு பிறகு இருக்கிற வரிகள்தான் இந்தக் கேள்விக்கான பதில் :)

    //romba azhagaa irukku paattu...//

    ரசித்தமைக்கு நன்றி, ஆதித்யசரவணா.

    ReplyDelete
  20. //அழகு//

    நன்றி திகழ்!

    ReplyDelete
  21. //Nice. :-)//

    நன்றி குமரா!

    ReplyDelete
  22. //பாட்டும் படமும் கொள்ளை அழகு....//

    மிக்க நன்றி பத்மநாபன்!

    ReplyDelete
  23. //பாட்டு பிரமாதம்!//

    மிக்க நன்றி லலிதாம்மா!

    ReplyDelete
  24. //awesome poem akka.. sooper o sooper.. !! :)//

    நன்றியோ நன்றி, சங்கர்! :)

    ReplyDelete