Monday, June 13, 2011

நித்தியமும் வந்து சத்தியங்கள் செய்தவன்...





நித்தியமும் வந்து சத்தியங்கள் பலசெய்த
வித்தகன் வேணுகான லோலனை கண்டாயோ!

வேய்ங்குழல் மத்தால் பேதை மனத் தயிரைக் கடைந்து..
நேயப்பொன் கரத்தால் பிரேமபக்தி வெண்ணை புசித்தான் !

ஆயர்க்குலச் சீயன் அவன் அங்கம் வழியும் கருமையை
சாயம் பூசினான் சந்திரன் தவழும் விண்ணிற்கு..
வியர்வையாய் சுரந்தனன் மாயன் மழையதனை - அதில்
மண்குளிரச் செய்வதாய் ஏழை மனம் குளிர்வித்தானடி..

18 comments :

Lalitha Mittal said...

'kuzhal maththu',
'manaththayir',
'bakthi vennai',
.....fantastic!

Radha said...

அழகான கவிதை சங்கர்.
[நித்தமா? நித்தியமா?]

Sankar said...

லலிதம்மா : நன்றி ! :)

Sankar said...

@ராதா அண்ணா: நன்றி அண்ணா ! நித்தியம் தான்.. ஏன் கேக்கறீங்க ?
பாட்டு நடனம் எல்லாம் கத்துக்கறீங்கலாமே? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சங்கர்
நல்ல பாடல்; நல்லாப் பாடி இருக்கீங்க! சாயம் பூசினான் என்ற இடத்தில் 'பூசினாற்' போல் பாடியது பிடித்து இருந்தது!

Radha said...

சங்கர்,
பாட்டு கத்துக்கணும் இன்னும் ஆவல் இருக்கு. நான் பாட(!??) கிரிதாரி நடனம் புரிவான். :-)

தற்பொழுது என் நிலை இந்தப் பாடலை தான் நினைவுபடுத்துகிறது.
"உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா !
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா !"

:-)

Radha said...

நித்தம் - தினம் தினம்
நித்தியம் - எப்பொழுதும்
--
என்று நினைக்கிறேன்.
எப்படி பார்த்தாலும் கண்ணனுக்கு
பொருத்தம் தான். :-)

திகழ் said...

அருமை ,வரியும் பாடலும்

In Love With Krishna said...

//வேய்ங்குழல் மத்தால் பேதை மனத் தயிரைக் கடைந்து..நேயப்பொன் கரத்தால் பிரேமபக்தி வெண்ணை புசித்தான் !// :))
Beautiful lines! Vera enna solla? :)
btw, can i dedicate this please?

Sankar said...

@KRS: ரொம்ப நன்றி.. ஹா ஹா தானா அமைஞ்சது.. :)

Sankar said...

@ராதா அண்ணா: கண்டிப்பா கத்துக்கங்க! நிறைய பாடுங்க.. அவன் கண்டிப்பா வந்து ஆடுவான்.. நான் guarantee.. :)

Sankar said...

@ராதா அண்ணா: ரெண்டு விதமாவும் நீங்க சொன்ன மாதிரி அழகாதான் இருக்கு. :)

Sankar said...

@திகழ்: ரொம்ப நன்றி! :)

Sankar said...

@ILWK: நன்றி! Of course, you can! :) its my pleasure.. :)

In Love With Krishna said...

@Sankar: Thanks:)
Dedicated to my Lord, Azhagiya Singar of thiruvallikeni who looks all the more handsome when He dresses up as Krishna.

நாடி நாடி நரசிங்கா! said...

நித்தியமும் வந்து சத்தியங்கள் பலசெய்த
வித்தகன் வேணுகான லோலனை கண்டாயோ!:)

Very nice:)

நாடி நாடி நரசிங்கா! said...

/வேய்ங்குழல் மத்தால் பேதை மனத் தயிரைக் கடைந்து..நேயப்பொன் கரத்தால் பிரேமபக்தி வெண்ணை புசித்தான் !

realy........superb:)

Sankar said...

Thanks a lot Rajesh. :)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP