Wednesday, April 27, 2011

சாய்பாபாவின் குரலிலே ஒரு கண்ணன் பாட்டு!

ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கட்கு நல்லடக்க நாளிலே அஞ்சலி!

அவரைப் பற்றி, பலரும் பலவும், புகழ்ந்தும் இகழ்ந்தும் பேசினாலும், காணொளியில் நுணுக்கினாலும்....
ஒரே புள்ளி: Sai Baba is "also" a Social Worker! So, let his soul rest in peace!

* "ஸ்வாமி நீலு" என்று கிராமத்துப் பெண்கள் சொல்லும் வறண்ட கிராமக் குடிநீர்
* மாணவர்களிடம் வசூல் செய்யாத "கல்வித் தந்தை"
* நோயாளிகளிடம் வசூல் செய்யாத "மருத்துவத் தந்தை"
* Very few places in India for a free open heart surgery!
* தமிழால் வளர்ந்து தமிழரை அழிப்பது போல், ஆன்மீகத்தால் வளர்ந்து ஆன்மீகத்தை அழிக்காத பான்மை!

பெரியவர் இரணியகசிபு: "அஹம் பிரம்மாஸ்மி = நான் கடவுள்!"
பிள்ளைப் பிரகலாதன்: "மனிதன் குற்றங் குறை உடையவனே!
அவன் 'பகவான்' அல்லன்! பகவானை அடைபவன்!"

வியத்தலும் இலமே! இகழ்தலும் இலமே!
ஒரு ஆன்மா அமைதியுற வேண்டுவோம்!!
சத்ய சாயி பாபா அவர்கட்கு அஞ்சலி!


அவர் குரலிலேயே ஒலிக்கும், கூட்டுப் பாடல், கண்ணன் பாடல்.....இன்று கண்ணன் பாட்டிலே!!




க்ஷீராப்தி சயனா நாராயணா
ஸ்ரீலக்ஷ்மி ரமணா நாராயணா
(திரு-பாற்கடல் துஞ்சிடும் நாராயணா
திரு-மாமகள் கொஞ்சிடும் நாராயணா)

நாராயணா லக்ஷ்மி நாராயணா
நரஹரி ரூபா நாராயணா
(நாராயணா திரு நாராயணா
ஆள்-அரி உருவே நாராயணா)

வைகுண்ட வாசா நாராயணா
வைதேகி மோகன நாராயணா
(வைகுந்த வேந்தமே நாராயணா
நப்பின்னை காந்தமே நாராயணா)

நாராயணா ஹரி நாராயணா
நதஜன பரிபால நாராயணா
(நாராயணா அரி நாராயணா
நாதியில்லார் தாங்கும் நாராயணா)

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!

2 comments :

சுபத்ரா said...

கிருஷ்ணார்ப்பணம்!

Lalitha Mittal said...

பாற்கடல் துயிலும் நாராயணா!
பார்க்கவி ப்ரியனே நாராயணா!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP