Friday, April 08, 2011

பாப்பா ராமாயணம் (ஒன்பதாம்பகுதி)


            பாப்பா ராமாயணம் (ஒன்பதாம்பகுதி)

    சுந்தரகாண்டம்-(பாகம்-6 )

சர்க்கம்-  38 -முதல் - 42  - வரை
        அனுமன் ''அடையாளம்'' கேட்டனராம்;
''ராமர்க்கு அளிப்பேன்''என்றனராம்.

     சீதை முன்னினைவினிலாழ்ந்தனராம்;
கண்ணீரால் துகில் நனைந்தனராம். 

     நிகழ்ந்ததை அனுமர்க்குக் கூறினராம்;
  பதிக்கு நினைவுறுத்தக் கோரினராம்.

          குடிலொன்றிலவள் அமர்ந்திருந்தனராம்;
மடியில் ராமர் துயின்றிருந்தனராம்.

காகம் ஒன்றைச் சீதை கண்டனராம்;
       தேகத்தை அது கொத்தத் துடித்தனராம்.

உதிரத்தினாலுடை நனைந்தனராம்;
அதனால் பதி துயில்கலைந்தன ராம்.

        நிகழ்ந்ததை அறிந்தவர் வெகுண்டனராம்;
         தர்ப்பாசனப்புல்லொன்றை எடுத்தனராம்.

புல்லைக் கணையாக்கி எய்தனராம்;
                   காகத்தின் கண்ணொன்றைக் கொய்தனராம் .

      இதனை அனுமன் செவி மடுத்தனராம்;
     நினைவுறுத்த வாக்கு கொடுத்தனராம்.

சீதை சூடாமணி களைந்தனராம்;      
பதியிடமளித்திடப் பணித்தனராம்.
   

வீரர் சூடாமணி பெற்றனராம்;      
         விரலில் அதையணிந்து நின்றனராம்.

    வைதேகியின் பதம் பணிந்தனராம்;
வலம் வந்தே கரங்குவித்தனராம்.

              அண்ணலை மனத்தால் துதித்தனராம் ;
ஆனந்தக்கண்ணீர் வடித்தனராம்.

(ராம ராம ஜெய ......சீதாராம்)

அன்னைக்கு தைரியமூட்டினராம்;
அபலைக்கு ஆறுதல் கூறினராம்.

         வானரர் வலிமையை விளக்கினராம்;
'உதவுவர்'என வாக்களித்தனராம்.

      'வெற்றி உறுதி' என முழங்கினராம்;
         'அழிவர் அரக்கர்'என மொழிந்தனராம்.

                               துணிவினைத் துணைகொள்ளத் தூண்டினராம்;
                   கவலையைக் களைந்திட வேண்டினராம்.

           வைதேகி உத்சாகம் அடைந்தனராம்;
               வாழ்த்தி விடைகொடுத்தனுப்பினராம்.

           அனுமன் வேகமாய்த் தாவினராம்;
    மரங்களைப் பிடுங்கி  வீசினராம்.


  மண்டபங்கள்பல இடித்தனராம்;
     அசோகவனத்தை அழித்தனராம்.

             கோட்டை வாயிலில் அமர்ந்தனராம்;
             அரசனைக் காணக் காத்திருந்தனராம்.

          ஓசையால் அரக்கியர் விழித்தனராம்;
         வனத்தின் அழிவினை அறிந்தனராம்.

        வானரச்செயல் என உணர்ந்தனராம்;
        வேந்தனுக்குரைக்க விரைந்தனராம்.

செவியுற்ற ராவணன் சீறினராம்;
           குரங்கைக் கொன்றுவிடக்  கூறினராம்.

கிங்கரர் ஆயுதமெடுத்தனராம்;      
 அஞ்சனி மகனை அடித்தனராம்.    

             கோபத்தால் மாருதி கொதித்தனராம்;     
கோர உருவம் எடுத்தனராம்.         

''ராமர்க்கே வெற்றி'' என்றனராம்;  
   தோரண வாயிலில் நின்றனராம்.    

இரும்பு உழல்தடி எடுத்தனராம்;    
    தாக்கிய கிங்கரரை அடித்தனராம்.     

    அடிபட்டனைவரும் இறந்தனராம்;      
அரசன் செவியுற்றதிர்ந்தனராம்.         

       ப்ரஹஸ்தனின்  மகனை ஏவினராம்;      
       ''குரங்கைக் கொல்''எனக் கூவினராம்.     

(ராம ராம ஜெய ....சீதாராம்)

8 comments :

Radha said...

ஸ்ரீ ராம ஜெயம் !

நாடி நாடி நரசிங்கா! said...

Superb! Superb! Superb! No Words:)

நாடி நாடி நரசிங்கா! said...

குடிலொன்றிலவள் அமர்ந்திருந்தனராம்;
மடியில் ராமர் துயின்றிருந்தனராம்.

So cute:)

நாடி நாடி நரசிங்கா! said...

சீதை முன்னினைவினிலாழ்ந்தனராம்;

பீப்பாக்கே புரியல பாப்பாக்கு எப்படி புரியும் :)

நாடி நாடி நரசிங்கா! said...

முன்னினைவினிலாழ்ந்தனராம் Means - முன்பு நடந்ததை சிந்தித்தனராம்
i Think:)

Lalitha Mittal said...

ந.நா
சரியாபிடிச்சீங்க;
''முன் நினைவினில்'',== பழைய நினைவில்
பாப்பாவுக்குப் புரிவது கஷ்டந்தான்.வேறேதாவது எளிமையான ,பொருத்தமான சொல்லிருந்தால் அடுத்த பின்னூட்டத்தில் சொல்லிடுங்க!மாத்திடலாம்!(''பீப்பாக்கே புரியல்லே''..இதப்படிச்சுட்டு நான் விழுந்து விழுந்து சிரிக்க எங்க வீட்டுத்தரை பள்ளமாயிடுத்து;என்னை வீட்டில் வந்த விருந்தினர் ஒருமாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டா ...காரணம் அவா தமிழ் தெரியாத டெல்லிக்காரா.)

நாடி நாடி நரசிங்கா! said...

:)

சீதை முன்னினைவினிலாழ்ந்தனராம்
சீதை முன் நினைவினில் ஆழ்ந்தனராம் - This is clear:)

தமிழ் said...

கோபத்தால் மாருதி கொதித்தனராம்;
கோர உருவம் எடுத்தனராம்.

வார்த்தைகளைக் கோர்த்த விதம் அருமை

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP