Wednesday, April 06, 2011

பாப்பா ராமாயணம் (எழாம்பகுதி)


             பாப்பா ராமாயணம் (எழாம்பகுதி)

                   சுந்தரகாண்டம் (பாகம்-4 )

சர்க்கம்-21-முதல் -27-வரை


செவியுற்ற சீதை சினந்தனராம்;              
தீயைத் தொட்டதுபோல் துடித்தனராம்.

         அரக்கன்முன் துரும்பினைப் போட்டனராம்;
அதற்கவன் சமமெனக் காட்டினராம்.      

"ராமரே,பதி!"எனக்கூவினராம்;                  
நெருங்கினால் அழிவெனச் சீறினராம்.

'ராமபாணம்'பற்றி விளக்கினராம்;         
"தோல்வி திண்ணம்"என சபித்தனராம்.

   செவியுற்ற ராவணன் வெகுண்டனராம்;
இரண்டுமாத கெடு வைத்தனராம்.        

முடியுமுன் இணங்கிடக் கூறினராம்;  
மறுத்தால் மரணமெனக் கூவினராம்.


அன்னையோ அஞ்சாமல் நின்றனராம்;
"அழிவுக்கு வழி இது"என்றனராம்.             

கோபத்தால் ராவணன் கொதித்தனராம்;
 அங்குமிங்கும் நிலையற்றலைந்தனராம்.

கோர அரக்கியரை விளித்தனராம்;        
சீதைமனத்தை மாற்றப் பணித்தனராம்.


செல்ல மனமின்றி நகர்ந்தனராம் ;
மாளிகை நோக்கி நடந்தனராம்.      

       அரக்கியர் அன்னையைச் சூழ்ந்தனராம்;
            ராமரை இழிச்சொல்லால் இகழ்ந்தனராம்.

    ராவணனின் புகழ் பாடினராம்;                 
சீதையோ செவிகளை மூடினராம்.    

     அவள்மனத்தை மாற்ற முயன்றனராம்;
தோல்வியடைந்து சலிப்புற்றனராம்.

கடுஞ்சொல் கூறிக் கடிந்தனராம்;      
மைதிலி மென்மனமொடிந்தனராம்.   

தீச்சொல் தாளாது துடித்தனராம்;        
   மௌனமாய்க் கண்ணீர் வடித்தனராம்.

தாயைத் தீயர் பயமுறுத்தினராம்;      
   மன்னனை மணக்க வற்புறுத்தினராம்.

மைதிலி பொறுமை இழந்தனராம்;     
"ராமரே பதி" என முழங்கினராம்.         

சிம்சுபா மரம் நோக்கி நடந்தனராம்.
         தீயோர்  அவளைப்பின் தொடர்ந்தனராம்.



கையினில் ஆயுதம் எடுத்தனராம்;    
கொன்று தின்றுவிடத் துடித்தனராம்.

கண்ட நம்நாயகி கலங்கினராம்;        
ஆயினும் தன்னிலை பிறழ்ந்திலராம்.

அரக்கனை மணந்திட மறுத்தனராம்;  
    கொன்று விழுங்கும்படி உரைத்தனராம்.

    தனது தலையெழுத்தை நொந்தனராம்;
துன்பந்தாங்காது தொய்ந்தனராம்       .

கணவரின் பிரிவால் வருந்தினராம்;
இணையும் நம்பிக்கை இழந்தனராம்.

அரக்கனை எண்ணி நடுங்கினராம்;
உயிர்விட முடிவு எடுத்தனராம்.      



அங்கொரு முதியவள் வந்தனராம்;
திரிசடை என்பது அவள் பெயராம்.

     சீதையின் சிறப்பினை அறிந்தவராம்;
அரக்கியர் ஏச்சினை அடக்கினராம்.

              கனவொன்று கண்டதாய் உரைத்தனராம்;
          கனவினில் நிகழ்ந்ததை விளக்கினராம்.

ராமரைக் கனவினில் கண்டனராம்;
"அரியோ?"என ஐயம் கொண்டனராம்.

வில்லேந்தி ராமர் வந்தனராம்;       
தசமுகனுடன் போர் புரிந்தனராம்.

தோல்வியுற்றரசர் இறந்தனராம்;    
ராமருடன் சீதை இணைந்தனராம்.

அரக்கர் அனைவரும் அழிந்தனராம்.;
    விபீஷணர் வேந்தராய் அமர்ந்தனராம்.


(ராம ராம ஜெய.....சீதாராம்)


1 comments :

தமிழ் said...

இராமா நாம‌ம் ந‌ம்மையெல்லாம்

பாட‌லுமாய்,ப‌ட‌முமாய்,பாட்டுமாய்
ப‌ர‌வ‌ச‌ம் அடைய‌ வைக்கிற‌து

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP