Sunday, April 03, 2011

பாப்பா ராமாயணம்-(நான்காம்பகுதி)

பாப்பா ராமாயணம்-(நான்காம்பகுதி)


                       சுந்தரகாண்டம்- (பாகம்-1 )
                                                     
        சர்க்கம்-1 ----அனுமன் சமுத்திரம் தாண்டுதல் .
[பாடலை நண்பர் கே.ஆர்.எஸ் பாட  கீழே  கேட்கலாம்.]
                     அனைவரும்    அனுமனை நாடினராம்;
         சீதையை மீட்க வேண்டினராம்.

                   அனுமனும் அதற்குத்  துணிந்தனராம்;
       ராமநாமத்தை ஜெபித்தனராம்.

    (ராம ராம ஜெய ......சீதாராம்)

               பேருருவத்தினராய் மாறினராம்;     
     மலையுச்சியிலே ஏறினராம்.   

               காலால்    மலையை அழுத்தினராம்;
                 வேகமாய் மூச்சினை இழுத்தனராம்.

             மலையை ஊன்றி உதைத்தனராம்;
                   விண்ணை       நோக்கி விரைந்தனராம்.

        வானவீதியை     எய்தினராம்;
                  வானவர்     மலர் மழை பெய்தனராம்.



வான்வழி     அனுமன் பறந்தனராம்;
            வால்    நக்ஷத்திரம்போல் தெரிந்தனராம்.

கடலரசன் இதைக்     கண்டனராம்;
 உதவிட எண்ணங்கொண்டனராம்.

     மைநாகமலைதனை விளித்தனராம்;
உபசரித்திடும்படி பணித்தனராம் .

     மலையரசனும் மனமிணங்கினராம்;
வேகமாய் ஓங்கி வளர்நதனராம்.

         அனுமனின் பாதையில் நின்றனராம்;
   மாருதி மலையைக் கண்டனராம்.

   வேகத்தடையென எண்ணினராம்;
                                                           தேக  பலத்தால்   தள்ளினராம்.

        நிலைகுலைந்தரசன் விழுந்தனராம்.;
                                                           நாணியவாறே            எழுந்தனராம்.

              அனுமனின் ஆற்றலை உணர்ந்தனராம்;
   அவரை அன்பாய் உபசரித்தனராம்.

          கடலோன் விருப்பத்தைக் கூறினராம்;
    களைப்பாறிச்செல்லக் கோரினராம்.

அனுமன்       ஐயம் தெளிந்தனராம்;
அன்புடன் அவனை வருடினராம்.

ஓய்வாய் அமர்ந்திட மறுத்தனராம்.
வைதேகியை மீட்கப் பறந்தனராம்.

வானோர் கண்டு      வியந்தனராம்.;
வாயுபுத்திரனைப்      புகழ்ந்தனராம்.

நெஞ்சுறம் கண்டோமென்றனராம்.;
      அறிவினைச் சோதிக்க எண்ணினராம்.

நாகமாதாவினை           ஏவினராம்.;
சுரசை       என்பது அவள் பெயராம்.

அரக்கியாய்        சுரசை     மாறினராம்;
அனுமனை        நோக்கிச்   சீறினராம்.

வீரனை வளைத்துப் பிடித்தனராம்;
      விழுங்கிடத் துடிப்பதாய் நடித்தனராம்.
  
பேயென        வாயை  விரித்தனராம்;
வாயினுள் புகும்படி பணித்தனராம்.

   'அயன் தந்த வரம்' என விளக்கினராம்;
அனுமனும் வாய்புக இணங்கினராம்

தேகத்தை அனுமன்  வளர்த்தனராம்;
அவளினும் பெரிதாய் பருத்தனராம்.

சுரசை     அனுமனை    அளந்தனராம்;
குகையென வாயைப் பிளந்தனராம்.

  சட்டென     அனுமன் சிறுத்தனராம்;
          சுட்டு          விரலளவு       சுருங்கினராம்.


சுரசையின்     வாயில் புகுந்தனராம்;
ஒரு நொடியில் வெளிவந்தனராம்..

அறிவால் அரக்கியை வென்றனராம்;
சுரசையோ  செயலற்று நின்றனராம்.

விண்ணோர்   வியந்து மகிழ்ந்தனராம்;
அனுமனின் அறிவைப் புகழ்ந்தனராம்.

சுரசையும்     சுயவுரு    மாறினராம் ;
அனுமனுக்கு    வாழ்த்து கூறினராம்.

வானரன் விருட்டெனப் பறந்தனராம்;.
ராமபாணமெனத்   தெரிந்தனராம்.

(ராம ராம ஜெய....சீதாராம்)
பாடலை நண்பர் கே.ஆர்.எஸ் பாட  கீழே  கேட்கலாம்.


[சர்கம்-1  அடுத்த பகுதியில்  தொடரும்]
                      -------------------------------------------------------------

6 comments :

நாடி நாடி நரசிங்கா! said...

என்ன சொல்றதுன்னு தெரியல . வரிக்கு வரி படிக்க படிக்க சலனமே இல்லாத கடல் போல இருக்கு
superf:)

Lalitha Mittal said...

ந.நா
உத்சாகமூட்டும் உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி .தொடர்ந்துபடித்து கருத்து தெரிவிக்கவும்

Radha said...

பள்ளி நாட்களுக்கு கடத்திச் செல்கிறீர்கள்... ரவி குதூகலமாக பாடியிருப்பதும் அருமை.

In Love With Krishna said...

இந்த பதிவை இதுவரை நான் படிக்கல.
இப்போ கேட்டுகிட்டே படிச்சேன்!
@KRS: கலக்கிடீங்க போங்க!! :))

சிவமுருகன் said...

கே.ஆர்.எஸ். ரொம்பம் நல்லா பாடியிருக்கீங்க!

தமிழ் said...

அருமை

பாடலோடு பாடிக்கையில் பரவசமே தனித் தான்

கண்ணப்பிரான் அவர்களுக்கு வாழ்த்துகள்

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP