Monday, February 14, 2011

காதல் முல்லை

கேஆர்எஸ் - in காதல் முல்லை மாலையில் மலர்கிறது..

(கேஆர்எஸ் வெளியூர் பிரயாணத்தில் இருப்பதனால் அவர் சார்பாக இந்த கவிதையை பதிவு செய்கிறேன்.)


மாலையில் ஒருநாள் மல்லிகைத் தோட்டம்..
மதிபோல் குதித்து வந்தாயே
நகம்போல் வெளுப்பும் சிகப்பும் கலந்த
அரும்பைப் பறித்துச் சென்றாயே

அரும்பு உந்தன் மேனியில் விரிந்து
மணமும் பரப்ப வைத்தாயே
முருகா என்னைத் தனியாய் முகர்ந்து
தினமும் அரும்பச் செய்தாயே

--------------


மாலையில் ஒருநாள் மின்னல் பளிச்ச
மறைந்தே சென்று ஒளிந்தாயே
மழையில் நனைந்த மலரை ஒதுக்கி
தனியே பின்னர் எறிந்தாயே

மழையில் நனைந்து இதயம் நனைந்து
மயிலும் நடந்து விழுகின்றேன்
நனைதல் எந்தன் குற்றம் குறையோ
மழையில் நனைந்து எரிகின்றேன்
---------------


கண்ணன் மகளே என்றே அன்று
கையில் எடுத்து மகிழ்ந்தாயே
சங்கரிப் பூவைச் சபையினில் இன்று
காலால் மிதித்து நடந்தாயே

நடந்தாய் வாழி வேல்முருகா- உன்
தடந்தாள் கிடந்தாள் நொடிப்பொழுதும்
கிடந்தாள் மேலே நடந்தாய் நீயே
நடந்தாய் வாழி தமிழ்முருகா!

3 comments :

Lalitha Mittal said...

avan kaalaal mithipada naam enna punniyam seithirukkanum?

கோமதி அரசு said...

அன்பர் கவிதை அருமை.

நாடி நாடி நரசிங்கா! said...

This kavithaifresh piece. in kannan songs / thanks shankar

& All
please see this kadal karumbe picture . tirukadal mallai perumaal nacchiyar tirukolam . see enlaarge view. realy nice .link bellow

http://thirukadalmallai.blogspot.com

ps: i know most of person see this pictures in before. but this is for new persons

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP