Friday, February 11, 2011

வரதனை நினைதொறும்...




எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !

யது வீரனை நந்த குமாரனை நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !
மலரே இருவிழி பங்கஜ மலரே திருமுகமும்
மலரே இருகரம் தாமரை மலரே திருவடிகள் !
மந்தஹாசமும் தவழ்ந்த சுந்தர முகாரவிந்தம் நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !

அன்னை தந்தை பதியும் அவன் !
அருந்துணை நவநிதியும் அவன் !
இன்பமும் அழகும் அவனே - என்
இன்பமும் அழகும் அவனே !
எழில் தரும் அணி பணி பவனே ! 
மீரா ப்ரபு கிரிதர கோபாலனை வரதனை நினைதொறும்
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !


டிஸ்கி: இது ஓர் மீள் பதிவு. பக்த மீரா படத்தில் இடம்பெறும் மேலே உள்ள அற்புதமான பாடலை நம் குமரன் ஏற்கனவே பதிந்து விட்டார். இருந்தாலும் சில பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். :-) 

பாடலை இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  

12 comments :

Sankar said...

Thanks Radha.. :) One of my favo song. :)

குமரன் (Kumaran) said...

இரண்டு முறை கேட்டேன் இராதா இன்று. :-)

Radha said...

@sankar,
i too like this song very much...this beautiful melody is in my all time favos list. :-)

Radha said...

//இரண்டு முறை கேட்டேன் இராதா இன்று. :-) //
குமரன்,
"இன்று மட்டும்" என்று சேர்த்துக் கொண்டேன். :-) காஞ்சி வரதராஜரின் முகத்தைப் பார்த்தால் கவலை எல்லாம் பறந்துவிடுகின்றன. :-)

In Love With Krishna said...

@Radha: nice :)
Varadar-um romba nice! :))

நாடி நாடி நரசிங்கா! said...

காபாடுராரா நன்னு கரி வராத ராஜா!
முதல் வரதர் படமே அற்புதம்
--
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !

வரிகளை படித்ததும் உள்ளம் நிறைந்தது
--

பாடலை இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம். :))
ஓகே
--

நாடி நாடி நரசிங்கா! said...

sorry notவராத - வரத ராஜா:)

ஷைலஜா said...

தேனாய் தித்திக்கிறது பாட்டு..வரதனை நாம் சேவிக்கப்போனோமே ராதா அது நினைவிற்கு வந்தது!

Radha said...

நன்றி ராஜேஷ். வரதர் - புன்னகை மன்னன். :-)

Radha said...

@ilwk,
yes. varadhar is always nice ! :-)
[ with the exams so near...were you taking a break by visiting kannan songs? :-) ]

Radha said...

ஷைலஜா அக்கா,தேனே தான். :-) இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை.

Kavinaya said...

//இருந்தாலும் சில பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். :-) //

ரொம்ப சரி, ராதா. அழகான படங்களுடன், அவனைப் போலவே அழகு மிகுந்த பாடல். மிக்க நன்றி தம்பீ!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP