அருள் பாடும் பறவை - பக்த மீரா
ராகம்: கமாஸ்
மறைந்த கூண்டில் இருந்து விடுதலை பிறந்த பறவை விரைந்தோடுதே !
நிறைந்த வெளி நீல வானிலே தன்னை மறந்து இறைவன் அருள் பாடுதே ! - மடை
திறந்த வெள்ளம் போல் என் உள்ளம் கண்ணனின் மலர்ந்த கருணை கழல் நாடுதே !
பிறந்த பயன் இன்றடைந்த மீராவின் உயிர் உவந்து ஆனந்த கடலாடுதே !
பாடல் பின்னனி:
பக்த மீரா அரண்மனை வாழ்வைத் துறந்து, கண்ணனைத் தேடும் ஆனந்த பயணத்தைத் தொடங்கும் கட்டம். இந்தப் பாடல் சோகத்தையும் ஆனந்தத்தையும் ஒருங்கே தர வல்லது. பாடல் தரும் அனுபவம் கேட்பவர் மனநிலையைப் பொருத்த விஷயம். :)
பாடலை எம்.எஸ் அவர்களின் தேன் போன்ற குரலில் இங்கே கேட்கலாம்.
~
கிரிதாரியின்,
ராதா