Sunday, June 07, 2009

சின்னக் கண்ணன் அழைக்கிறான்...




முன்னே ஒரு முறை இதே போல் கண்ணன் மேல் ஒரு காவடிச் சிந்து எழுதியிருக்கேன். இன்னொண்ணு எழுத திடீர்னு ஆசை வந்தது. தப்பில்லை தானே? இந்த பாடலை யாரேனும் பாடித் தந்தால் மகிழ்வோம் (கண்ணனும் நானும் :)


துள்ளித் துள்ளி வரும் கண்ணன்
தனை அள்ளி அள்ளிக் கொஞ்ச எண்ணும் - எந்தன்
கண்ணா மணி வண்ணா மலர் மன்னா கார் வண்ணா இங்கு
வாடா முன்னால் வாடா - கட்டி
முத்தம் ஒன்று தாடா!

ஓடி வரும் சின்னக் கண்ணன்
தனை நாடிச் செல்லும் நெஞ்சம் கொஞ்ச - செல்லக்
கண்ணன் அவன் கெஞ்சக் கெஞ்சக் கொஞ்சிக் கொஞ்சிக் கொஞ்சம் மிஞ்சி
மறைவான் ஓடி ஒளிவான் - பின்னர்
வருவான் இன்பம் தருவான்!

ஆரங்கள் மார்பினில் அசைய
மயிற் பீலியும் அதனுடன் இசைய - வண்ணக்
கண்ணன் அவன் மண்ணைத் தின்று அன்னை அவள் கண்ணீர் விட
சிரிப்பான் சீண்டிக் களிப்பான் - வாய்
திறப்பான் உள்ளம் நிறைப்பான்!

கன்னக் குழி தன்னில் வீழும்
மனம் கண்ணன் எழில் தன்னில் ஆழும் - அந்தப்
பொல்லாதவன் புல்லாங்குழல் துளை தன்னிலே இதழ் சேரவே
மலரும் நெஞ்சம் குளிரும் - உயிர்
உருகும் கண்கள் பெருகும்!

--கவிநயா

23 comments :

தமிழ் said...

அருமையாக இருக்கிறது

மயாதி said...

இப்படியானவற்றை வாசிக்கும் சந்தர்ப்பம் இப்போதெல்லாம் அபூர்வமாகத்தான் கிடைக்கிறது...
வாழ்த்துக்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கண்ணன் பாட்டுக்கு நல்வரவு-க்கா என்று அந்தக் கண்ணனும், இந்தக் கண்ணனும் சேர்ந்தே சொல்கிறோம்! வாங்க-க்கா! வாங்க! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆரம்பமே காவடிச் சிந்தோட வந்தாச்சா? அசத்தல்! Everybody Dance! :)

//சிரிப்பான் சீண்டிக் களிப்பான் - வாய்
திறப்பான் உள்ளம் நிறைப்பான்!//

சூப்பரு!

//கண்ணா மணி வண்ணா மலர் மன்னா கார் வண்ணா
இங்கு வாடா முன்னால் வாடா
கட்டி முத்தம் ஒன்று தாடா!//

டேய்! கண்ணப் பய புள்ள! திமிரா? அக்கா கேக்கறாங்க-ல்ல? கொடுறா!

கொடுத்துட்டு சீக்கிரம் வா! நாம கும்மியடிக்க இன்னொரு பதிவுக்குப் போவோனும்! :)

குமரன் (Kumaran) said...

வாங்க அக்கா. நல்லா இருக்கு பாட்டு. பாடலாம்ன்னா எனக்கு இன்னும் மெட்டு பிடிபடலை.

Kavinaya said...

வருகைக்கும் ரசனைக்கும் நன்றி, திகழ்மிளிர் :)

Kavinaya said...

வாங்க மயாதி. முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி :)

Kavinaya said...

வருக கண்ணா. அதென்ன அப்படிச் சொல்லீட்டிங்க? ரெண்டாவது முறையால்ல வந்திருக்கேன், மறந்திடுச்சா? :(

பாட்டை ரசிச்சதுக்கு நன்றி :)

//கொடுத்துட்டு சீக்கிரம் வா!//

ம்ஹூம். அவரு வரேன்னாலும் நான் அனுப்பறதா இல்லை :)

Kavinaya said...

வாங்க குமரா. நீங்க முன்னே ஒரு முறை பாடினீங்களே அதே மெட்டுதான். பதிவுல சுட்டி குடுத்திருக்கேன் பாருங்க. சமர்த்தா சீக்கிரம் பாடி அனுப்புங்க பார்ப்போம்... :)

Kavinaya said...

மன்னிக்கணும் குமரா. தப்பா சொல்லிட்டேன். மெட்டு கொஞ்சம் வேற மாதிரிதான் வரும்.

sury siva said...

http://www.youtube.com/watch?v=965sbx9rYb8

Radha said...

very good song ! :-)

itsSoldier said...

காற்று வாங்க போனேன் ஒரு கவிதை படித்து உங்கள் நயம் அறிந்தேன்,
சீக்கிரம் என் கிடாரை எடுத்து, மெட்டுப்போட்டு பாடுகிறேன்.
கவிநயம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், தங்கள் தமிழ் தொண்டிற்காக

Kavinaya said...

//itsSoldier said...

காற்று வாங்க போனேன் ஒரு கவிதை படித்து உங்கள் நயம் அறிந்தேன்,
சீக்கிரம் என் கிடாரை எடுத்து, மெட்டுப்போட்டு பாடுகிறேன்.
கவிநயம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், தங்கள் தமிழ் தொண்டிற்காக//

மிக்க நன்றி, உங்கள் முதல் வருகைக்கும், ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கும்.

itsSoldier said...

மெட்டு போட்டு கிடாரை கையில் எடுத்து பாடி பதிவு செய்து போட்டிருக்கிறேன். மிகுந்த நன்றி.

http://www.youtube.com/watch?v=mW0wbMJzLUk

Kavinaya said...

// itsSoldier said...
மெட்டு போட்டு கிடாரை கையில் எடுத்து பாடி பதிவு செய்து போட்டிருக்கிறேன். மிகுந்த நன்றி.//

உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது. சிரத்தையாய் பாடி பதிந்தமைக்கு மிக்க நன்றி!

Anonymous said...

மிகவும் சின்ன சின்ன கன்னனுக்கு சிங்காரங்கள் -சித்ரம், இந்தோனேசியா

Kavinaya said...

//மிகவும் சின்ன சின்ன கன்னனுக்கு சிங்காரங்கள் -சித்ரம், இந்தோனேசியா//

வருகைக்கு மிக்க நன்றி சித்ரம்.

ஷைலஜா said...

பாடல் அருமை கவிநயா

நேரமிருந்தா நானும் பாட முயலுகிறேன்

Kavinaya said...

//பாடல் அருமை கவிநயா

நேரமிருந்தா நானும் பாட முயலுகிறேன்//

மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் அக்கா. காத்திருக்கேன்...

Anonymous said...

chinna chinna.patham vaitha kanana ni vava vava./.manivana ni vava vava

Anonymous said...

புல்லாங்குழல் ஊத தந்த கண்ணணே/// புல்லரிக்க வைத்த நிமிடங்கள் தான் எத்தனை ஐயா ///சித்ரம்/

Frankmfec said...

//itsSoldier said... காற்று வாங்க போனேன் ஒரு கவிதை படித்து உங்கள் நயம் அறிந்தேன், சீக்கிரம் என் கிடாரை எடுத்து, மெட்டுப்போட்டு பாடுகிறேன். கவிநயம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், தங்கள் தமிழ் தொண்டிற்காக// மிக்க நன்றி, உங்கள் முதல் வருகைக்கும், ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கும்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP