Wednesday, March 28, 2007

41. ராமன் எத்தனை ராமனடி!

கண்ணன் பாட்டில், ஒரு ராமன் பாட்டு போடலாமா?
அதுவும் விதம் விதமான ராமன்.

ராமன் எத்தனை ராமனடி! - கவியரசரோ கண்ண தாசன்!
பாட்டோ ராமனை, அப்படியே அனுபவித்து எழுதியுள்ளார்.
இந்தப் பாட்டு, ஒரு பெண் பார்க்கும் படலத்தில் பாடுவது போல், திரைப்படத்தில் காட்சி வரும்! நடிகை யார் என்பது மறந்து விட்டது!






rama-sita-radha-krishna2

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்

(ராமன் எத்தனை ராமனடி)

கல்யாண கோலம் கொண்ட - கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த - சீதாராமன்
அரசாள வந்த மன்னன் - ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த - சுந்தரராமன்

(ராமன் எத்தனை ராமனடி)

தாயே என் தெய்வம் என்ற - கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட - தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் - கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் - ஸ்ரீஜெயராமன்

(ராமன் எத்தனை ராமனடி)

வம்சத்திற்கொருவன் - ரகுராமன்
மதங்களை இணைப்பவன் - சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் - அனந்தராமன்


ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!


உங்களுக்குத் தெரிந்த வேறு ராமன்கள் இருந்தாலும் சொல்லுங்க! :-)
ராம நவமி மேளாவில் அதையும் சேர்த்து விடலாம்!


படம்: லக்ஷ்மி கல்யாணம் (கவியரசரின் சொந்தப் படம் என்று நினைக்கிறேன்)
இசை: M.S.விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: P.சுசீலா
ராகம்: சுப பந்துவராளி

ramaswami_kudanthai
இராமசுவாமி திருக்கோவில், கும்பகோணம்

Friday, March 23, 2007

40. சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?

கவிஞர் கண்ணதாசன் பவுடர் போடுவாரா?
தெரியாது! :-)
ஆனால் ஒரு பாட்டில், ஒரு குழந்தைக்குப் பவுடர் போடுவது போல்
மெல்லிய சொற்களால் ஒத்தி ஒத்தி எடுக்கிறார்!
என்ன பாடல்? -
சின்னச்சின்னக் கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ?


(பதிவிலேயே கேட்க, மேலே Play button-ஐச் சொடுக்கவும்)

Real Player-இல் கேட்க
Cool Goose-இல் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள

Priya%20Baby%20Krishna

சின்னச்சின்னக் கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ

கன்னம்மின்னும் என்தன்கண்ணா

பால்மணக்கும் பருவத்திலே
உன்னைப்போல் நான்இருந்தேன்
பட்டாடைத் தொட்டிலிலே
சிட்டுபோல் படுத்திருந்தேன்
அந்நாளை நினைக்கையிலே
என்வயது மாறுதடா
உன்னுடன் ஆடிவர
உள்ளமே தாவுதடா
(கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா
சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ)

ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே
விளைவது மழலையடா
ஈரேழு மொழிகளிலே
என்னமொழி பிள்ளைமொழி
கள்ளமற்ற வெள்ளைமொழி
தேவன் தந்த தேவமொழி
(கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா
சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ)

இவ்வளவு நேரம் கொஞ்சிக் கொஞ்சி வந்த பாடல், ஒரு நொடியில்
நெஞ்சில் உள்ள சோகத்தையும் சேர்த்துச் சொல்வதாக மாறி விடுகிறது!
ஒரே பாடலில் இரு வேறு ரசனைகள்!
மழலை மகிழ்ச்சி, பின்பு தத்துவ நெகிழ்ச்சி!
அது எப்படி கண்ணதாசனுக்கு மட்டும் இந்த கைவந்த கலை? :-)


பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா
புன்னகையும் வேஷமடா
நன்றிகெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்துவிட்டால்
இல்லைஒரு துன்பமடா
(கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா
சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ)

28e48ff4-0a52-49b9-b4a7-1c3dc5100395




படம்: வாழ்க்கைப் படகு
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
குரல்: PB ஸ்ரீநிவாஸ்
(பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ்) - தகவலுக்கு நன்றி: ஜி.ரா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்

Wednesday, March 21, 2007

எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே!


எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே!

யதுவீரனை நந்தகுமாரனை நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே!

மலரே இருவிழி பங்கஜ மலரே திருமுகமும்
மலரே இருகரம் தாமரை மலரே திருவடிகள்
மந்தஹாசமும் தவழ்ந்த சுந்தர முகாரவிந்தம் நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே!

அன்னை தந்தை பதியும் அவன்
அருந்துணை நவநிதியும் அவன் (என்)
இன்பமும் அழகும் அவனே
எழில் தரும் மணி வடிவவனே
மீரா பிரபு கிரிதரகோபாலனை வரதனை நினைதொறும்
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே



பாடியவர்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
திரைப்படம்: மீரா
வெளிவந்த வருடம்: 1945
இசையமைப்பாளர்: எஸ்.வி. வெங்கடராமன்

அருஞ்சொற்பொருள்:

யதுவீரன் - யாதவ குல வீரன்
நந்தகுமாரன் - நந்த கோப குமாரன்
பங்கஜமலர் - தாமரை மலர்
மந்தஹாஸம் - புன்னகை
சுந்தர - அழகிய
முகாரவிந்தம் - முக + அரவிந்தம் = முகமாகிய தாமரை
பதி - கணவன்

Friday, March 02, 2007

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா


கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான்
கண்ணாடி பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்த காற்றை நிறுத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
(கண்ணாமூச்சி ஏனடா)

என் மனம் உனக்கொரு விளையாட்டுப் பொம்மையா?
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?
நெஞ்சில் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல் தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
என் நெஞ்சில் கூடியே நிறம் மாற வா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாக வாழ்க
கலந்திட வா
(கண்ணாமூச்சி ஏனடா)

வான் மழை விழும் போது மலை கொண்டு காத்தாய்
கண் மழை விழும் போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை இரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை
நீ காணக் கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
(கண்ணாமூச்சி ஏனடா)


திரைப்படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இயற்றியவர்: வைரமுத்து
இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்

சித்ரா மட்டும் பாடியது, சித்ராவும் ஜேசுதாஸும் பாடியது.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP